ஏறி இறங்கிய அரசு பேருந்து... மகன் கண்முன்னே உயிரிழந்த தாய்...! கன்னியாகுமரியில் சோகம்...! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பேருந்து ஏறி, இறங்கியதில் மகன் கண்முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் போஸ்கோ. இவரது மனைவி மரிய கொரோட்டி பிரீடா(40). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் தனது மூத்த மகன் ஜான் பிஜோவுடன் ஸ்கூட்டரில் மரிய கொரட்டி பிறீடா கணவருக்கு சாப்பாடு கொண்டு சென்றுள்ளார்.

ஸ்கூட்டரை மகன் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது குலசேகரம் நாகக்கோடு சந்திப்பு அருகே தனியார் மதுபான பார் பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக திடீரென ஸ்கூட்டரில் இருந்து மரிய கொரோட்டி பிரீடா கீழே விழுந்துள்ளார். அப்பொழுது அவ்வழியாக வந்த அரசு பேருந்து அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக மரிய கொரோட்டி பிரீடா உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த குலசேகரம் போலீசார், உயிரிழந்த மரிய கொரட்டி பிறீடாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mother killed in government bus collision in kanniyakumari


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->