மிக்ஜம் புயல் பாதிப்பு: நிவாரணம் வழங்கிய ஹூண்டாய் நிறுவனம்! - Seithipunal
Seithipunal


சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாக மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

குறிப்பாக சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை 2 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது. 

பல்வேறு இடங்களில் மழை நீர் வடியாததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். வெள்ள பாதிப்பை தொடர்ந்து சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். 

இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனமும் நிவாரண தொகை அறிவித்துள்ளது. அதாவது, மிக்ஜம் புயல் நிவாரண பணிக்கான முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஹோண்டா நிறுவனம் ரூ. 3 கோடி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mikjam storm damage Hyundai 3 crore


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->