மிக்ஜம் புயல் பாதிப்பு: நிவாரணம் வழங்கிய ஹூண்டாய் நிறுவனம்!
Mikjam storm damage Hyundai 3 crore
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாக மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை 2 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் மழை நீர் வடியாததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். வெள்ள பாதிப்பை தொடர்ந்து சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனமும் நிவாரண தொகை அறிவித்துள்ளது. அதாவது, மிக்ஜம் புயல் நிவாரண பணிக்கான முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஹோண்டா நிறுவனம் ரூ. 3 கோடி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Mikjam storm damage Hyundai 3 crore