மனநலம் குன்றிய கிறிஸ்துவப் பள்ளி மாணவர்கள் கழிவறையை கழுவிய பகீர் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அரசு உதவி பெறும் கிறிஸ்துவ (CSI) பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் சுமார் 80 மாணவர்கள் பயின்று வரும் நிலையில் கல்வி கற்கும் மனநலம் பாதிக்கபட்ட மாணவர்களை பள்ளியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்வது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அந்த வீடியோவில் பள்ளி சீருடையில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர் பள்ளி விடுதியின் கழிவறையை சுத்தம் செய்யும் காட்சி பதிவாகி இருந்தது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள கிறிஸ்துவ பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோசப் தினகரன் இது குறித்து மாணவர்களிடம் விசாரித்த போது, இங்கு பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் இம்மானுவேல் என்பவர் தனக்கு தலைமை ஆசிரியர் பதவி வழங்காததால் பள்ளியின் பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்து, அவரே வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்" என குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பேராயர் தலைமையில் விடுதி இயக்குநர் விசாரணை நடத்த உள்ளதாகவும் பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் கூறியது போல் ஆசிரியரால் இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டது அல்லது தினமும் மாணவர்களே கழிவறையை சுத்தம் செய்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mentally challenged students wash school toilet in sivakasi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->