நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - சற்றுமுன் மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


நாளை மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக, சற்றுமுன் அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வரலாறு காணாத மழை-வெள்ள பாதிப்பு மற்றும் தொடர் கனமழை காரணமாக வெள்ள நீரில் மயிலாடுதுறை மாவட்டம் மிதந்து கொண்டிருக்கிறது.

ஒரே நாளில் 44 செ.மீட்டர் கொட்டித் தீர்த்த மழை காரணமாக சீர்காழியில் பல்வேறு பகுதிகள், வயல் வெளிகள், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின், கடலூர், மயிலாடுதுறை, சீர்காழியில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட இன்று மாலை சென்னையிலிருந்து புறப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் பெய்து வரும் கனமழை காரணமாக, அப்பகுதியில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று, அமைச்சர் மெய்யநாதன் தகவல் தெரிவித்துள்ளர்.

இந்நிலையில், கனமழை, மழை வெள்ளம் காரணமாக நாளை மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக, அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mayiladurai School College leave 13112022


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->