நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - சற்றுமுன் மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


நாளை மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக, சற்றுமுன் அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வரலாறு காணாத மழை-வெள்ள பாதிப்பு மற்றும் தொடர் கனமழை காரணமாக வெள்ள நீரில் மயிலாடுதுறை மாவட்டம் மிதந்து கொண்டிருக்கிறது.

ஒரே நாளில் 44 செ.மீட்டர் கொட்டித் தீர்த்த மழை காரணமாக சீர்காழியில் பல்வேறு பகுதிகள், வயல் வெளிகள், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின், கடலூர், மயிலாடுதுறை, சீர்காழியில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட இன்று மாலை சென்னையிலிருந்து புறப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் பெய்து வரும் கனமழை காரணமாக, அப்பகுதியில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று, அமைச்சர் மெய்யநாதன் தகவல் தெரிவித்துள்ளர்.

இந்நிலையில், கனமழை, மழை வெள்ளம் காரணமாக நாளை மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக, அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mayiladurai School College leave 13112022


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->