குமரி : கர்ப்பிணி மனைவியைத் தாக்கிய குற்றவுணர்ச்சியில் கணவன் தூக்கிட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


குமரி : கர்ப்பிணி மனைவியைத் தாக்கிய குற்றவுணர்ச்சியில் கணவன் தூக்கிட்டு தற்கொலை.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குட்டைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கப்பன்-ரெஜிதா தம்பதியினர். கர்ப்பிணியாக இருக்கும் இவர் தன் பெற்றோர் வீட்டில் தங்கி இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று தங்கப்பனுக்கும், ரெஜிதாவுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த தங்கப்பன் அருகில் கிடந்த சுத்தியலால் ரெஜிதாவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதனால், பலத்தக் காயமடைந்த ரெஜிதா மயங்கி கீழே விழுந்தார். இதைப்பார்த்த ரெஜிதாவின் பெற்றோர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

ரெஜிதா உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதற்கிடையே நிதானத்திற்கு வந்த தங்கப்பன் ஆத்திரத்தில் கர்ப்பிணி மனைவியைத் தாக்கிவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியால் பதற்றமடைந்தார்.

பின்னர் வீட்டில் மற்றொரு அறைக்குச் சென்று தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி அவர்கள் விரைந்து வந்து தங்கப்பனின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆத்திரத்தில் மனைவியைத் தாக்கிய குற்றவுணர்ச்சியில் கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man sucide after attck pregnent wife in kanniyakumari


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->