கள்ளக்குறிச்சி : மனவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கணவர் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி : மனவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கணவர் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மோ. வன்னஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் மகள் விஜயா. இவர் பல்லகச்சேரி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு தம்பதியினருக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், முருகன் கடந்த மே மாதம் 3 ஆம் தேதி விஜயா வீட்டிற்குச் சென்று அங்கு விஜயாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் கோபமடைந்த முருகன் தன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விஜயாவை குத்தியுள்ளார். 

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முருகனைப் பிடிப்பதற்கு முயற்சி செய்துள்ளார். அப்போது முருகன் தான் வைத்திருந்த கத்தியால் போலீசாரைத் தாக்கியுள்ளார். 

அதன் பின்னர் போலீசார் முருகனைப் பிடித்துக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்திய போது, முருகன் மனைவி விஜயாவை கொலை செய்வதற்கு முன்பு எலி மருந்து சாப்பிட்டு விட்டு வந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீசார் முருகனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து திரும்பினார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man arrested for kill wife in kallakurichi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->