எரிபொருள் விலை ஏற்றம் தாக்கம்...! - விமான டிக்கெட் கட்டணம் மீண்டும் உயர்வு...!
Impact fuel price hike Airline ticket prices hiked again
மேற்காசியப் பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள அரசியல் பதற்றமும் போர் சூழலும், உலகளாவிய எரிசக்தி சந்தையை அதிரவைத்துள்ளது. இந்த மோதல்களின் பின்னணியில், விமான எரிபொருள் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் நேரடி தாக்கம் விமானப் போக்குவரத்து துறையிலும் வெளிப்படத் தொடங்கியுள்ளது.

இதன் விளைவாக, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளுக்கான டிக்கெட் கட்டணங்களில் மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக, ஏர் இந்தியா நிறுவனம் கடந்த மாதம் முதன்முறையாக அறிவித்தது.
தற்போதைய சூழலில் எரிபொருள் விலை உயர்வு தொடர்ந்து அதிகரித்துள்ளதால், பயண கட்டணங்களை மீண்டும் உயர்த்தும் முடிவை நிறுவனம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒரு மாத காலத்திற்குள் இரண்டாவது முறையாக இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களிலும் அமல்படுத்தப்படவுள்ளது. சுமார் 2000 கிலோமீட்டர் வரை பயணம் செய்யும் உள்நாட்டு விமானங்களுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.899 வரை உயர்த்தப்பட உள்ளது.
அதேவேளை, சர்வதேச விமானங்களுக்கான கட்டணம் சுமார் 280 அமெரிக்க டாலர் வரை உயர்த்தப்பட உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.ஏப்ரல் மாதத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட இந்த புதிய கட்டண உயர்வு, உள்நாட்டு விமான சேவைகளுக்கு ஏப்ரல் 8ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மேலும், சர்வதேச விமானப் பயண கட்டண உயர்வு ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த கட்டண உயர்வு, விமானப் பயணிகளை நேரடியாக பாதிக்கக்கூடியதாக இருப்பதால், பயண திட்டங்களில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Impact fuel price hike Airline ticket prices hiked again