இன்று அதிகாலை தமிழகத்தை அதிரவைத்த சம்பவம்.! அடக்கடவுளே.,
madurai family attempt suicide two proplr dead
கொரோனா நோய் தொற்று அச்சம் காரணமாக, மதுரை அருகே ஒரு குடும்பமே தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம், தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலை முயற்சி சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோதிகா, இவர் தனது தாய் மற்றும் 3 வயது மகன் மற்றும் தம்பியுடன் வசித்து வந்துள்ளார். ஜோதிகாவின் வருமானத்தில் தான் மொத்த குடும்பமும் நடத்தி வந்து உள்ளது.
இந்நிலையில், ஜோதிகாவுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் நோய்த்தொற்று இருக்குமோ? நம்மால் எப்படி வாழ முடியும்? என்று எண்ணிய ஜோதிகா, தாய் லட்சுமி, ஜோதிகாவின் 3வயது மகன் ரித்தீஷ், ஜோதிகாவின் தம்பி சிபிராஜ் ஆகிய 4 பேரும் சாணி பவுடர் வாங்கி குடித்து தற்கொலை முயற்சி செய்து உள்ளனர்.
இதில் ஜோதிகா மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் அதிகாலையில் வீட்டுக்குள்ளேயே உயிரிழந்துவிட்டனர். அதே சமயத்தில் லட்சுமி மற்றும் சிபிராஜ் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா நோய் தொற்றால் ஒரு குடும்பமே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
madurai family attempt suicide two proplr dead