கிருஷ்ணகிரி விவகாரம்! மேலும் ஒரு முக்கிய பெண் புள்ளி கைது! இதுவரை 14 பேர்... விரிவடையும் விசாரணை! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரியில் போலியாக என்சிசி பயிற்சி முகாம் நடத்தி, தனியார் பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தனியார் பள்ளியின் பெண் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கை பொறுத்தவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி, என்சிசி போலி பயிற்சியாளர் சிவராமன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், சிறப்பு புலனாய்வு குழுவினர் இந்த வழக்கை விரிவுப்படுத்தி உள்ளனர். 

மாவட்டத்தில் வேறு பள்ளிகளில் இதுபோன்று போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்ட உள்ளது.

இந்த வழக்கில் முக்கிய மூன்று குற்றவாளிகளில் சிவராமன் முதல் குற்றவாளியாக கருதப்படுகிறார். இரண்டாவது குற்றவாளியாக கமல் என்பவர் கைது செய்யப்பட்டார். மூன்றாவது குற்றவாளியாக சம்பந்தப்பட்ட அந்த தனியார் பள்ளியின் பெண் முதல்வர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Krishanagiri School Girls Abused case


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->