அமைச்சர் துரைக்கண்ணு மறைந்த நிலையில், அடுத்த வேளாண் அமைச்சர் அறிவிப்பு!
KP Anbazhagan new minister in agriculture
தமிழக வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணு நேற்று மறைந்த நிலையில் அந்த துறை காலியாக இருந்தது. இந்த நிலையில் வேளாண்மைத் துறையை ஏற்கனவே அமைச்சராக இருக்கும் கேபி அன்பழகனும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதே அமைச்சரவை உயர்கல்வித் துறை அமைச்சராக இருக்கும் கேபி அன்பழகன் தற்போது வேளாண் துறையை கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆட்சி முடிய இன்னும் 6 மாத காலம் மட்டுமே இருக்கும் நிலையில் கூடுதலாக ஒருவரை நியமிக்காமல், ஏற்கனவே அமைச்சராக இருக்கும் கேபி அன்பழகன் இடம் கூடுதலாக இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. துரைக்கண்ணும் அன்பழகனும் வன்னியர் சமுதாயத்தை சார்ந்தவர்கள் என்பதால் இதில் பிரச்சினை ஏதும் ஏற்படாமல் சாமர்த்தியமாக எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்துள்ளது தெரிய வருகிறது.
English Summary
KP Anbazhagan new minister in agriculture