வேப்பூர் கெங்கையம்மன் ஆலய திருவிழா.. வெகு விமர்சியாக நடைபெற்ற சிரசு ஊர்வலம்! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டம்வாலாஜா தாலுக்கா வேப்பூர் கிராமம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயத்தில் ஒன்பதாம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 

ராணிப்பேட்டை மாவட்டம்வாலாஜா தாலுக்கா வேப்பூர் கிராமம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் வருடாந்திர திருவிழா நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு திருவிழா தொடங்கி நடைபெற்றுவருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம்வாலாஜா தாலுக்கா வேப்பூர் கிராமம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயத்தில் ஒன்பதாம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு கடந்த வாரம்  செவ்வாய்க்கிழமை அன்று காப்பு கட்டுதளுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில்  ஒன்பதாம் நாளான இன்று கெங்கை அம்மனுக்கு சிரசு ஊர்வலம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

 முன்னதாக கெங்கை அம்மன் ஆலயத்தில் இருந்து மேள தாளங்கள் முழங்க பறை இசை வாசிக்க கரகாட்டத்துடன்   ஊர்வலமாக புறப்பட்டு சென்ற  சிரசு ஆனது வேப்பூர் பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகளில் பல வலம் வந்த சிரசு அதிகாலை கெங்கையம்மனுக்கு வைக்கப்பட்டது இந்த சிரசு நிகழ்ச்சியில் கோவிந்தா கோவிந்தா என கோஷம் பக்தி கோஷங்கள் முழங்க பக்தர்கள் வழிபட்டனர்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக வேப்பூர் பஞ்சாயத்து தலைவர் ராமு கலந்து கொண்டு சிறப்பித்தார் மற்றும் கோவில் நிர்வாகிகள் ஊர் நாட்டாமைதாரர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்று இந்த கெங்கை அம்மன் கோவில் திருவிழாவை வெகு விமர்சியாக நடத்தினர். இதில் ஊர் பொதுமக்கள் நாட்டாமை தாரர்கள் இளைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Veppur Kengaiyamman temple festival was held with great fanfare during the chariot procession


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->