நீட் தேர்வில் மதிப்பெண்களை மாற்றி தருவதாக கூறி பலகோடி மோசடி ; 2 பேர் கைது!
A multi crore scam claiming to change marks in the NEET exam 2 arrested
நீட் தேர்வில் மதிப்பெண்களை மாற்றியமைப்பதாக கூறி மோசடி செய்த 2 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. நீட் தேர்வு எழுதிய பலரிடம் கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்து மோசடி செய்துள்ளனர்.
மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான 'நீட்-யூஜி 2025' தேர்வை நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதினர்.இந்தத் தேர்விற்கான தற்காலிக விடைக் குறிப்பை தேசிய தேர்வு முகமை கடந்த 3ம் தேதி வெளியிட்டு மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆட்சேபனைகளைப் பரிசீலித்த பிறகு, இறுதி விடைக்குறிப்பு அதன் அடிப்படையிலேயே தேர்வு முடிவுகளும், தகுதிப் பட்டியலும் வெளியிடப்படும்.
இந்நிலையில், நீட்-யூஜி 2025 தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை தற்போது இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.இந்நிலையில், நீட் தேர்வில் மதிப்பெண்களை மாற்றியமைப்பதாக கூறி மோசடி செய்த 2 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த சந்தீப் ஷா, சலீம் படேல் இருவரும் நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமையில் உள்ள அதிகாரிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளனர்.
மேலும், நீட் தேர்வு மதிப்பெண்களை மாற்றி அமைக்க முடியும் என்றும் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரிடம் போலி வாக்குறுதி அளித்து தலா 90 லட்ச ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளனர். நீட் தேர்வு எழுதிய பலரிடம் கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்து மோசடி செய்துள்ளனர்.
ஏமாற்றப்பட்டது குறித்து உணர்ந்த மாணவ, மாணவியர், பெற்றோர் இது குறித்து புகார் அளித்ததையடுத்து . விசாரணையை தீவிரப்படுத்திய சிபிஐ, மோசடியில் ஈடுபட்ட 2 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் 16ம் தேதி வரை காவலில் அடைக்க சிபிஐ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில் விசாரணை தீவிரமடைந்து வருகிறது.
English Summary
A multi crore scam claiming to change marks in the NEET exam 2 arrested