டாஸ்மாக் மது போதை! பெற்ற மகனை போட்டு தள்ளிய தந்தை போட்ட நாடகம்! - Seithipunal
Seithipunal


கோவில்பட்டி அருகே, மதுபோதையில் தகராறு செய்த மகனை கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.

லிங்கம்பட்டி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டி, கடலையூர் சாலையில் சிமெண்ட் கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி அமுதா. இவர்களுக்கு திருமணமான ஒரு மகளும், 23 வயதான தர்மதுரை என்ற மகனும் உள்ளனர்.

தர்மதுரை கூலி வேலை செய்து வந்தாலும், அடிக்கடி மது அருந்தி வீட்டில் தகராறு செய்வது வழக்கம். மதுவில் சிக்கியதற்காக அவர் மீது கோவில்பட்டி போலீசில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன.

இதனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மருதுபாண்டி தர்மதுரையை திருப்பூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு அனுப்பியிருந்தார்.

16-ம் தேதி, நீதிமன்ற விசாரணைக்காக ஊருக்கு வந்த தர்மதுரை, விசாரணை முடிந்ததும் திருப்பூர் திரும்ப மறுத்துள்ளார். இதனை தொடர்ந்து, வீட்டில் மீண்டும் மது குடித்து வாதத்தில் ஈடுபட்டார்.

சம்பவம் நடந்த அன்று இரவு, குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த தர்மதுரையை, மருதுபாண்டி ஆத்திரத்தில் தலையணை வைத்து மூச்சு அடக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

கொலையை மறைக்க, மருதுபாண்டி 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்து, உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்ததாக கூறி நாடகமாடியுதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மருத்துவமனையில் தர்மதுரை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். பிரேத பரிசோதனையில் கொலை உறுதி செய்யப்பட்டதையடுத்து, மருதுபாண்டி கைது செய்யப்பட்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kovilpatty dad kill son tasmac


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->