கொரோனா தடுப்பூசியால் சிக்கிய ஒல்லி வில்லி கொடுங்கையூர் சசிகலா.! ஒருவேளை சோறு தின்று தலைமறைவு.! - Seithipunal
Seithipunal


சென்னையில் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பெண்ணை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்னையில் இன்று கொரோனா தடுப்பூசி போட வந்த பெண் ஒருவர், 50 லட்சம் மோசடி செய்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் சசிகலா. இவர் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக ஆதார் கார்டு கொடுத்தபோது போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

சீட்டு பணம் வசூலித்து 50 லட்சம் மோசடி செய்ததாக கொடுங்கையூர் சசிகலாவை காஞ்சிபுரத்தில் வைத்து, நேற்று சென்னை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

அதுமட்டுமல்லாமல் அவரின் உடலைக் குறைத்து தலைமறைவாக இரண்டாண்டுகள் இருந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாள் ஒன்றுக்கு ஒரு வேளை மட்டும் உணவு உண்டு அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் மெலிந்து தலைமறைவாக இருந்து வந்தது குறித்து போலீசார் அவரிடம் விசாரித்தபோது, கணவர் உடல்நிலை சரியில்லாத வருத்தத்தில் இருந்ததாகவும், அதனால் ஒரு வேளை உணவு மட்டுமே சாப்பிட்டதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KODUNGAIYUR SASIKALA ARRESTED


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->