காதால் விவகாரம்: தட்டி கேட்ட அ.தி.மு.க. பிரமுகருக்கு நேர்ந்த விபரீதம்!  - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அத்திக்கடை பகுதியைச் சேர்ந்தவர் சிராஜுதீன் (வயது 58) இவர் அ.தி.மு.கவை சேர்ந்தவர். 

அதே பகுதியைச் சேர்ந்த முகமது அசாருதீன் (வயது 32) என்பவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் முகமது அசாருதீன், சிராஜுதீனின் உறவினர் பெண்னை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். 

சிராஜுதீன், முகமது அசாருதீனிடம் திருமணமான நிலையில் வேறொரு பெண்ணை காதலிக்கிறாயே என தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் முகமது, எப்படியாவது சிராஜுதீனை கொலை செய்து விட வேண்டும் என திட்டம் பெற்றுள்ளார். 

அதன் படி, நேற்று இரவு கடைவீதி பகுதியில் மறைந்திருந்து சிராஜூதீனை, முகமது அவரது கையில் வைத்திருந்த கத்தியினால் சரமாரியாக கழுத்து பகுதியில் குத்தினார். 

இதில் நிலைகுலைந்த சிராஜுதீன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த சிராஜூதீனின் மகன் கொரடாச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிராஜூதீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது அசாருதீனை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Khadal issue ADMK member Tragedy happened 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->