தமிழக முதல்வர் விஜய்க்கு, கேரளா முன்னாள் முதல்வர் வாழ்த்து !
kerala ex cm pinarayi wish tn cm vijay
கேரளா முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "தமிழ்நாடு முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஜோசப் விஜய்க்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயக அமைப்பில் மக்கள் வழங்கும் தீர்ப்பு மிகப் பெரிய பொறுப்பாகும். தமிழ்நாட்டு மக்கள் தங்கள்மீது வைத்துள்ள நம்பிக்கை, சமூக நீதி, மதச்சார்பின்மை மற்றும் மக்கள்நலன் ஆகிய மதிப்புகளை உயர்த்திப் பிடிக்கும் ஆட்சியாக உருவாகும் என நம்புகிறேன்.
கேரளமும் தமிழ்நாடும் நீண்டகால நட்பும் ஒத்துழைப்பும் பகிர்ந்து வரும் மாநிலங்களாகும். கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தவும், மதச்சார்பின்மையை பாதுகாக்கவும், இரு மாநில மக்களும் இணைந்து செயல்பட முடியும் என்று நம்புகிறேன். வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
kerala ex cm pinarayi wish tn cm vijay