டிஜிட்டல் சர்வேயை எடுக்க கல் குவாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு! தொடங்கியது போராட்டம்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள கல் குவாரிகளில் டிஜிட்டல் சர்வேயை எடுக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கல் குவாரி  உரிமையாளர்கள், இன்று முதல் காலை வரைற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகளையும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனரின் டிஜிட்டல் சர்வே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த டிஜிட்டல் சர்வீஸ் நடவடிக்கையை கைவிடக் கோரி, கரூர் மாவட்ட குவாரி உரிமையாளர்கள், கிரஷர் உரிமையாளர்கள், டிப்பர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

மேலும், இதனை வலியுறுத்தி இன்று கரூர் மாவட்டம், பவித்திரம் அடுத்த புதுக்கனல்லி அருகே நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி, கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இந்த போராட்டத்தில் கல்குவாரி உரிமையாளர்கள், கிரஷர், டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள், குவாரி ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karur Stone Quarry protest


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->