சாதிவாரி கணக்கெடுப்பு எதிரொலி: கூடுதலாக ஒரு மணிநேரம் வகுப்பு... ஆசிரியர்களுக்கு உத்தரவு! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தபட்டு இருந்தனர்.

தசரா விடுமுறை காலத்தில் கணக்கெடுப்பு பணிகளை முடிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் பணிகள் நிறைவு பெறாததால், கடந்த அக்டோபர் 7 முதல் 18ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு நீண்ட விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த விடுமுறையிலும் ஆசிரியர்கள் கணக்கெடுப்பு பணியில் முழுமையாக ஈடுபட்டனர்.

இதன் விளைவாக, அரசு பள்ளிகளில் பாடத்திட்டங்கள் பின்தங்கியுள்ளன. மாணவர்கள் கற்க வேண்டிய பாடங்கள் குறித்த காலத்தில் முடிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதை சமாளிக்க நடவடிக்கை எடுத்த கல்வித்துறை, புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நேற்று முதல் வரும் ஜனவரி 24ஆம் தேதி வரை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தினமும் ஒரு கூடுதல் வகுப்பு நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அதாவது, வழக்கமான நேர அட்டவணைக்கு மேலாக ஒரு மணி நேரம் கூடுதலாக வகுப்புகள் நடைபெறும். இதன் மூலம் விடுமுறை காரணமாக பின்தங்கிய பாடத்திட்டங்களை மாணவர்கள் கற்கும் வாய்ப்பு கிடைக்கும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து குறைந்த காலத்துக்குள் பாடத்திட்டங்களை நிறைவு செய்ய உழைக்க வேண்டும் எனவும், கல்வி தரம் குறையாமல் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

karnataka govt schools teachers caste survey


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->