ஓபிஎஸ்-க்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள்! இது நம்ம லிஸ்டல இல்லையே?!
Kallakurichi OPS Poster issue
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அதிமுகவின் கொடி, இரட்டை இலை சின்னத்தை பற்றி பேசி வருவதை கண்டித்து, கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்@ நாகரிக கோமாளி ஓ பன்னீர்செல்வம் பைத்தியத்தை கண்டிக்கிறோம்!
ஒன்றரை கோடி கழகத் தொண்டர்கள், 2504 கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் ஏக மனதோடு ஓ பன்னீர்செல்வம் வகித்த அடிப்படை உறுப்பினர் மற்றும் கழக அனைத்து பதவிகளையும் நீக்கி கழகமும், நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் உறுதி செய்து உள்ளது.
அதை மீறியும் ஓபிஎஸ் கோமாளியே இரட்டை இலை சின்னத்தை பற்றி பேச உனக்கு எந்த தார்மீக உரிமையும், தகுதியும் இல்லை பைத்தியமே என்று அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரை கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாக ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Kallakurichi OPS Poster issue