சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய இளம் பெண் தீக்குளித்தது தற்கொலை.!  - Seithipunal
Seithipunal


சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய இளம் பெண் ஒருவர், உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், கே.பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் பவித்ரா. இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். 

இந்த நிலையில், பவித்ரா கடந்த சில நாட்களாக  மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இதனை அடுத்து நேற்று முன்தினம் அவரை கல்லூரி விடுதியிலிருந்து, வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். 

நேற்று வீட்டில் தனியாக இருந்த பவித்ரா மரவேலைக்கு பயன்படுத்தும் தின்னரை தன் உடல் மீது ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

இது தொடர்பாக மகராஜாகடை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

k poosaripatti young lady suicide case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->