குமரித் தந்தை திரு.மார்ஷல் ஏ.நேசமணி அவர்கள் பிறந்ததினம்!.
It is the birthday of Kumari Thandai Mr Marshall A Nesamani
குமரித் தந்தை' திரு.மார்ஷல் ஏ.நேசமணி அவர்கள் பிறந்ததினம்!.
மார்ஷல் ஏ. நேசமணி (Marshal A. Nesamony, ஜூன் 12, 1895 - ஜூன் 1, 1968) தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்ட அரசியல்வாதி. இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் திருவிதாங்கூர் சமத்தானத்துடன் (கேரளா) இருந்த குமரி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் பல போராட்டங்கள் நடத்தி 1956 நவம்பர் 1 இல் குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்கத் தலைமையேற்றுப் பாடுபட்டவர் இவர். இவரை மக்கள் 'குமரித் தந்தை' என்று அழைக்கின்றனர்.

எழுத்தாளர் திரு.வி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நினைவு தினம்!
தமிழக எழுத்தாளர் "வாண்டு மாமா" திரு.வி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நினைவு தினம்!.
சிறுவர்களுக்கான கதை எழுதுவதில் சிறந்து விளங்கிய வி.கிருஷ்ணமூர்த்தி 1925ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் என்ற ஊரில் பிறந்தார்.
இவர் முதன்முதலாக கலைமகள் இதழில் 'குல்ருக்' என்ற கதை எழுதினார். சென்னையில் நடைபெற்ற கையெழுத்து பத்திரிக்கைகள் மாநாட்டில் இவரது பத்திரிக்கை முதல் பரிசு பெற்றது.
இவர் கௌசிகன் என்ற புனைப்பெயரில் பல கதைகளை எழுதி வந்தார். ஆனந்தவிகடன் இதழின் ஓவியர் மாலி, இவரது திறனை அறிந்து, சிறுவர் கதைகள் எழுதுமாறு கூறி 'வாண்டு மாமா' என்று பெயர் சூட்டினார்.
கல்கியின் 'கோகுலம்' குழந்தைகள் வார இதழில் பலே பாலு, சமத்து சாரு போன்ற இவரது படைப்புகள், குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.
60 ஆண்டுகளுக்கும் மேல் பத்திரிக்கை துறையில் பணியாற்றிய இவர் தனது 89வது வயதில் 2014 ஜூன் 12, ஆம் தேதி அன்று மறைந்தார்.
English Summary
It is the birthday of Kumari Thandai Mr Marshall A Nesamani