எமனாக மாறிய பைக் சாவி - மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி.!!
college student died for electric shock attack near chidhambaram
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கூத்தங்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரது மகன் வினோத் சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் வினோத் நேற்று விடுமுறை என்பதால் இருசக்கரவாகனத்தில் அம்மாபேட்டை பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அதன் படி அவர் அம்மாபேட்டை பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது இருசக்கர வாகனத்தின் சாவி கீழே விழுந்ததால் அதை வாகனத்தில் இருந்தபடியே எடுப்பதற்காக ஒரு கையால் அருகில் நின்ற இரும்பு குழாயை பிடித்தபடி குனிந்தார்.

அந்த இரும்பு குழாயில் ஏற்கனவே மின்கசிவு இருந்ததால் வினோத் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால், அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வினோத்தை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வினோத் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
college student died for electric shock attack near chidhambaram