அதிர்ச்சி.. சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்ஸோவில் கைது..!!! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடிக்கு அருகே பதினேழு வயது சிறுவனுக்கு, அரசுப் பள்ளி ஒன்றில் படித்து வந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். 

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி உல்லாசமாக இருந்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதையறிந்து அதிர்ச்சிக்குள்ளான சிறுமியின் பெற்றோர் வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். 

அந்தத் தகவலின் படி போலீசார் சிறுவனை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் சிறுமியிடம் உல்லாசமாக இருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

boy arrested for harassment in tirupathur


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->