''ஏ.ஐ. ஆல் சிக்கலான கோடிங் எழுதும் திறன் இல்லை; இன்னும் பத்து ஆண்டுகளில் தீர்வு கிடைக்குமா..? அவர்களுக்கே தெரியாது'': பில்கேட்ஸ் கருத்து..!
Bill Gates says AI is not capable of writing complex coding
ஐடி துறைக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏ.ஐ.,) மிகவும் பேருதவியாக இருக்கிறது. இந்நிலையில், ஏ.ஐ.,க்கு சிக்கலான கோடிங் எழுதும் திறன் இல்லை' என மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, பில்கேட்ஸ் கூறியதாவது:
எளிதாக இருப்பதை கோடிங் எழுதி மனிதர்களுக்கு உதவியாக இருக்கும் ஏ.ஐ.,க்கு சிக்கலான கோடிங் எழுதும் திறன் இல்லை. எளிதான கோடிங் எழுதுவதில், இன்றைய ஏ.ஐ., மனித வேலையை மாற்றும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஏ.ஐ.,யால் சிக்கலான கோடிங் எழுதுவதில் நிலவும் சிக்கல்களுக்கு அடுத்த ஓரிரு ஆண்டுகளில் அல்லது பத்து ஆண்டுகளில் தீர்வு கிடைக்குமா என்பது இந்த துறையில் உள்ளவர்களுக்கே தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், ஏ. ஐ., அவரை ஆச்சரியப்படுத்தும் விகிதத்தில் மேம்பட்டு வருகிறதாகவும், குறிப்பாக ஆராய்ச்சி திறன் உள்ளிட்டவற்றில் முன்னேற்றம் கண்டு வருகிறதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏ.ஐ., ஒரு சிறந்த வேலையைச் செய்கிறது என்றும், அனைத்து தகவல்களையும் சேகரித்து பொருளை நன்கு அறிந்து, தாம் தெரிந்து கொள்ள வேண்டியதை சுருக்கமாக கூறுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெலிசேல்ஸ் வேலை அல்லது டெலிசப்போர்ட் வேலையை ஏ. ஐ., யால் செய்ய வைப்பது எப்போது மிகவும் நல்லது என்று நீங்கள் கூறலாம். அது மனிதர்களை விட மிகவும் துல்லியமானது என மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் கூறியுள்ளார்.
அத்துடன், தொழில்நுட்பத் துறையில் ஏ. ஐ., பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பதை கடினமாக்குமா என்பது குறித்த கேள்விக்கு பில்கேட்ஸ், 'உற்பத்தித்திறனை மேம்படுத்தும்போது, நீங்கள் அதிகமாக சம்பாதிக்கலாம் என்றும், நீங்கள் குறைவான உற்பத்தித் திறனைப் பெற்றால், அது மோசமானது என்றும், மேலும் நீங்கள் அதிக உற்பத்தித்திறனைப் பெற்றால், அது நல்லது என்றும் பதிலளித்துள்ளார்.
English Summary
Bill Gates says AI is not capable of writing complex coding