பஞ்செட்டி ஊராட்சியில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம்.. அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல் நாட்டினார்!  - Seithipunal
Seithipunal


பஞ்செட்டி முதல்நிலை ஊராட்சியில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூட கட்டிடம் கட்டுவதற்கான பணி யினை அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல் நாட்டிவைத்தார். 

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்செட்டி முதல் நிலை ஊராட்சியில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்ட நிதியின் கீழ் (2025-26) ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூட கட்டிடம் கட்டுவதற்கான பணியை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் முன்னிலையில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல் நாட்டி பேசினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க பஞ்செட்டி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சமுதாய கூடம் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். அதனை ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் பொன்னேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு உங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

முன்னதாக சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு பாடியநல்லூர் முதல் நிலை ஊராட்சியில் அலுவலக செயல்பாடுகள் குறித்தும், செங்காளியம்மன் கோவில் சோழவரம் மெயின் ரோடு பகுதியில் மழை நீர் வடிகால் கால்வாய் பணிகள் குறித்தும், சோழவரம் -1 நியாய விலைக் கடையில் பொருட்களின் தரம், பொருட்களின் அளவு, விரல் ரேகை பதிவேடு,  பொருட்கள் இருப்பு ஆகியவைகள் குறித்தும், பூதூர் ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தின்  செயல்படுத்தப்படும் மருத்துவப் பணிகள், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பதிவேடு குறித்தும் , கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளி வீடு கட்டும் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In Panchayatti a community hall valued at 50 lakh rupees was inaugurated by Minister Ch M Nassar


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->