துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது சோகம்.! லாரி மோதி கணவன்-மனைவி பலி..! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது லாரி மோதி கணவன்-மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி செட்டிசாவடி முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்தவர் வெல்டிங் தொழிலாளி ராஜசேகர் (36). இவரது மனைவி கலைவாணி. இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் நேற்று மதியம் நிலவரப்பட்டியில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காக சென்றனர். இதையடுத்து அங்கிருந்து மாலை 6 மணி அளவில் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தாசநாயக்கன்பட்டி அருகே வந்த போது சேலம் நோக்கி வந்த கன்டெய்னர் லாரி ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் கீழே விழுந்த கலைவாணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் ராஜசேகர் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ராஜசேகர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband wife killed in lorry collision in salem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->