மனைவியை கத்தியால் குத்திக்கொன்று விட்டு கணவர் தற்கொலை.! கோவை அருகே பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு கணவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் காரமடை பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சந்தோஷ் (32). இவரது மனைவி சூர்யா (30). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சந்தோஷுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும் தினமும் மது குடித்துவிட்டு வந்ததால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து நேற்று முன்தினமும் இவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால் சூர்யா, கணவருடன் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதைத்தொடர்ந்து மனைவி சூர்யாவை சமாதானப்படுத்தி அழைத்து வருவதற்காக நேற்று மாலை சந்தோஷ் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்பொழுது வீட்டில் சூர்யா மட்டும் இருந்த நிலையில் சந்தோஷ், சூர்யாவை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அப்பொழுது இவர்களுடைய மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சூர்யாவின் கழுத்தில் குத்தியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலயே இரத்த வெள்ளத்தில் சூர்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சந்தோஷம் அங்கேயே மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband stabbing and killed his wife after suicide in kovai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->