#தர்மபுரி : கர்ப்பிணி மனைவியை பார்க்க சென்ற கணவர்... வழியிலேயே நேர்ந்த பரிதாபம்..!
Husband died in road accident in dharmapuri
தர்மபுரி மாவட்டத்தில் கர்ப்பிணி மனைவியை பார்க்கச் சென்ற கணவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் கடத்தூரை அடுத்து அய்யம்பட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (31). இவருக்கும், புளியம்பட்டி பகுதியை சேர்ந்த நதியா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நதியா தற்போது கர்ப்பமாக இருப்பதால் அவர் வளைகாப்பு முடிந்து தாய் வீட்டில் உள்ளார். இதனால் நேற்று மாலை லட்சுமணன், மனைவியை பார்ப்பதற்காக புளியம்பட்டிக்கு சென்றுள்ளார்.
அப்பொழுது அவழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று லட்சுமணன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் லட்சுமணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Husband died in road accident in dharmapuri