#நாமக்கல் || மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனமுடைந்த கணவர் தூக்கிட்டுத் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனம் உடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே மாவுருட்டி பகுதியை சேர்ந்தவர் பால் வியாபாரி சீனிவாசன்(36). இவருக்கு மனைவியுடன் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் சீனிவாசன் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் விரக்தி அடைந்த சீனிவாசன் நேற்று இரவு வீட்டு அருகில் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சீனிவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband commits suicide by hanging due to disagreement with wife namakkal


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->