70 வயதில் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சியடைந்துள்ள பாட்டி: குவியும் பாராட்டு..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த பிளஸ் 2 பொது தேர்வுகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் கடந்த ஆண்டை விட அதிகமாக நடப்பாண்டில் 95.03 விழுக்காடு மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், கோவையை சேர்ந்த 70 வயதுடைய ராணி என்பவர்   பிளஸ் 2 பொது தேர்வில் 346 மதிப்பெண்கள் பெற்று, தேர்ச்சி அடைந்துள்ளார்.

இவருடைய கணவர் உயிரிழந்துள்ள நிலையில், வீட்டில் தனியாக இருந்த இவருக்கு படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வீட்டில் இருந்தபடியே பன்னிரண்டாம் வகுப்புக்கான பாடங்களை படித்து, தேர்வெழுதியுள்ளார்.

ராணி, தமிழில் அதிகபட்சமாக 89 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 50 மதிப்பெண்களும் பெற்றுள்ளதோடு, வரலாறு பாடத்தில் 52 மதிப்பெண்கள் என மொத்தம் 346 மதிப்பெண்கள் பெற்று தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளார். இதனால் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Grandma passed the Plus Two examination at the age of 70


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->