காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்ற வேண்டும் -  முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய 4 வகுப்பு மாணவன்.! - Seithipunal
Seithipunal


காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்ற வேண்டும் -  முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய 4 வகுப்பு மாணவன்.!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தியுள்ளது. 

அதன் படி இந்தத் திட்டமானது முதற்கட்டமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது.  இதையடுத்து இந்தத் திட்டம் தற்போது தமிழகத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

18 லட்சம் மாணவ - மாணவியர் பயனடைகின்றனர். இந்த நிலையில், கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த சேப்ளாபட்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் முரசொலிமாறன் என்ற நான்காம் வகுப்பு மாணவன் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை "கலைஞர் காலை உணவு திட்டம்" என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், மாற்றம் செய்யப்பட்ட பெயரை அறிவிக்க கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த சேப்ளாபட்டியில் உள்ள அரசு நடுநிலை பள்ளிக்கு வருகை புரிய வேண்டும்" என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fourth class student write letter to cm stalin in karoor


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->