நேருக்கு நேர் மோதிய கார் - பேருந்து : 4 பேர் பலி.!
four peoples died for car accident in thiruvannamalai
நேருக்கு நேர் மோதிய கார் - பேருந்து : 4 பேர் பலி.!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூரில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றது. இதையடுத்து இந்தப் பேருந்து சேத்துபபட்டு அடுத்த கிழக்கு மேடு கூட்டுச்சாலையில் சென்றுகொண்டிருந்தது.
அப்போது எதிரே வந்த காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
முதலில் படுகாயமடைந்த நபரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுபி வைத்தனர். பின்னர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் விபத்துக்குள்ளான கார் மற்றும் பேருந்தை அப்புறப்படுத்தி, விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
four peoples died for car accident in thiruvannamalai