கோவை : நீதிமன்றம் அருகே வாலிபரை கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கீரநத்தம் பகுதியைச் சேர்ந்த கோகுல். இவர் வழக்கு ஒன்றில் ஆஜராகி கையெழுத்து போடுவதற்காக கோயம்புத்தூர் ஜே.எம்.2 நீதிமன்றத்திற்கு தனது நண்பர் மனோஜூடன் வந்ததிருந்தார். 

அதன் படி, அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்தனர். அப்போது, ஐந்து பேர் கொண்ட கும்பல் கோகுலை சுற்றி வளைத்து  சரமாரியாக வெட்டி கொன்றனர். இதைத் தடுக்க வந்த கோகுலின் நண்பர் மனோஜையும் வெட்டினர். 

இந்த தாக்குதலில் கோகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மனோஜ் பலத்த காயமடைந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் மனோஜை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல், கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களிலும் போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு, வந்தனர். 

இந்த நிலையில், இன்று கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களில் ஒருவருடைய செல்போன் எண்ணின் சிக்னல் நீலகிரி மாவட்டத்தில் கிடைத்துள்ளது. இதைத் தனிப்படை போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். 

அந்த சோதனையில், ஜோஸ்வா தேவபிரியன், கௌதம், அருண்குமார், பரணி, ஹரி உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, போலீசார் அவர்களை கோத்தகிரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five peoples arrested for young man kill in covai court case


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->