மகளிடம் பாலியல் சீண்டல்... தாய்க்கு கொலை மிரட்டல்... "தந்தை" சிறையில் அடைப்பு...!
Father arrested for sexually harassing a daughter in kovai
கோவையில் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
கோவை பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் தினமும் மது அருந்திவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது, குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மாணவியின் தந்தை, மகள் என்றும் பாராமல் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதையடுத்து வீட்டிற்கு தாய் வந்த உடன் மாணவி இதுகுறித்து தாயிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய், கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர், மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு வீட்டிலிருந்த கத்தியை எடுத்து குத்த முயன்றுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து கோவை மாநகர காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், கொலை மிரட்டல் பாலியல் தொந்தரவு பெண்கள் கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்டா ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு மாணவியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
Father arrested for sexually harassing a daughter in kovai