கடலூர் அருகே சோகம்.! அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் தாக்கி பலி.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடலூர் மாவட்டம் குமராட்சி கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் விவசாயி ரமேஷ்(45). இவர் நேற்று மாலை வீட்டிலிருந்து அப்பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். 

அப்பொழுது வயல்வெளியில் தரையில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை எதிர்பாராத விதமாக ரமேஷ் விதித்துள்ளார். அப்பொழுது ரமேஷ் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார். இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக ரமேஷை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ரமேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த குமராட்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Farmer killed by electrocution in Cuddalore


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->