#Erode || சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கி விவசாயி பலி! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறி வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக, கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது.

அந்த வகையில் கலந்த 5 நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தெங்குமரஹாடா சாலையில் சென்ற வனத்துறையினர் வாகனத்தை ஒற்றைக் காட்டு யானை வழிமறித்தது தாக்கப்படுகின்றது. ஆனால் வனத்துறையினர் தங்கள் வாகனத்தை முன்னோக்கி செலுத்திய போது ஒற்றைக் காட்டு யானை அங்கிருந்து நகர்ந்து வனப்பகுதிக்குள் தப்பி ஓடியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் உயரமானது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அட்டமொக்கை பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி ராமசாமி என்பவர் உயிரிழந்துள்ளார். சமீப காலமாக சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் வாகனங்களை வழி மறிப்பதும், விவசாய நிலங்களை சேதப்படுத்துவதும் தொடர்கதையாகி வரும் நிலையில் வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறாதவாறு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Farmer died after attacked by wild elephant near Sathyamangalam


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->