#தமிழ்நாடு | கைல காசு இல்லை, வறுமை! இரு பிணங்களுடன் வாழ்ந்த பெண்ணால் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பெண், கையில் பணம் இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

வண்டிப்பேட்டை குமணன் வீதியில் வசித்து வருபவர் சாந்தி. மனநலம் பாதிக்கப்பட்ட இவர், கணவன் மற்றும் அவரின் தாயுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சாந்தியின் வீட்டில் துர்நாற்றம் வீசியதாக, கோபிசெட்டிப்பாளையம்  காவல்துறைக்கு இன்று காலை பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாந்தியின் வீட்டினுள் இரண்டு பிரேதங்கள் இருந்ததை கண்டு அதிர்ந்து போய் உள்ளனர்.

இதுகுறித்து போலீசார் சாந்தியிடம் நடத்திய விசாரணையில், கணவனும், தாயும் நான்கு நாட்களுக்கு முன்னதாகவே இறந்து விட்டதாகவும், என் கையில் காசு இல்லை. அதனால் நான் யாரிடமும் சொல்லவில்லை என்று சாந்தி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், பிரேதத்தை கைப்பற்றி கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், போலீசார் தங்களுடைய சொந்த செலவில் அடக்கம் செய்ய உள்ளதாக சாந்தியிடம் தெரிவித்து உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Dead body shanthi home


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->