பள்ளிக்கு புறப்பட்ட போது மின்சாரம் தாக்கி 5 ஆம் வகுப்பு மாணவி பலி.!!
school student died for electric shock attack in thirukattupalli
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் ஸ்டீபன்ராஜ் - ஏஞ்சலின் பாத்திமா தம்பதியினர். இவர்களுக்கு இனிய தர்ஷினி என்ற மகள் உள்ளார். இவர் அதேபகுதியில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், இனிய தர்ஷினி நேற்று காலையில் பள்ளிக்கு செல்வதற்காக வழக்கம்போல் எழுந்து கிளம்பி கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு முன்புறம் இருந்த கொட்டகையில் இரும்பு கம்பத்தை தொட்டுள்ளார். அதில் இருந்து எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில், சிறுமி இனிய தர்ஷினி தூக்கி வீசப்பட்டு பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்துள்ளார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியை மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்கைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இனிய தர்ஷினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
school student died for electric shock attack in thirukattupalli