சூதாட்ட வழக்கு குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்...! - Seithipunal
Seithipunal


அமலாக்கத்துறை, சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடித்த நடிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதில் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா,ரானா டகுபதி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் சமூகவலைதள பிரபலங்கள் உள்ளிட்ட  29 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படையில் செய்யப்பட்ட  இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி பலருக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அவ்வகையில், விசாரணைக்கு 6ம் தேதி அதாவது இன்று ஆஜராகும்படி நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.இந்த நிலையில், இன்று ஐதராபாத்திலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா ஆஜரானார்.

அங்கு  ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடத்தது குறித்து பதியப்பட்ட பணமோசடி வழக்கில் விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்குமுன்பு இதே வழக்கில் கடந்த 30ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆஜரானார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Vijay Deverakonda appears Enforcement Directorate office connection gambling case


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->