தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து - பரிதாபமாக பறிபோன ஓட்டுனர் உயிர்.! - Seithipunal
Seithipunal


தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து - பரிதாபமாக பறிபோன ஓட்டுனர் உயிர்.!

தேனி நோக்கி முப்பது பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று இன்று காலை புறப்பட்டுச் சென்றது. இந்தப் பேருந்து ஆண்டிபட்டி அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. 

இதைப்பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது பேருந்து ஓட்டுநர் தங்கபாண்டியன் திடீரென வெளியே குதித்துள்ளார். இதில், அவரது தலையில் பலத்த காயமடைந்ததனால், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதற்கிடையே பேருந்து சாலையோரம் இருந்த முள்வேலி மீது மோதி சிறு சேதத்துடன் நின்றது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஓட்டுநரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

driver died for govt bus accident in theni


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->