நான்கரை ஆண்டுகளாக செய்யாத CM ஸ்டாலினை 45 நாளில் செய்ய போகிறார்? கொந்தளித்த அரசு ஆசிரியர்கள்!
DMK Govt MK Stalin Govt teachers
நான்கரை ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்கு 45 நாட்களில் தீர்வு அளிப்பதாக அரசு கூறுவது நகைச்சுவைதான் என, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் மயில் விமர்சித்தார்.
சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் வைத்துள்ள 10 அம்ச கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கனவே பலமுறை அரசிடம் கூறப்பட்டவையே. ஆனால், கல்வித்துறையில் உள்ள சில அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகளின் அரசாணைகளை மீறி செயல்முறை ஆணைகளை வெளியிட்டு, ஆசிரியர்களின் ஊதியங்களை தணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.
“25 ஆண்டுகளாக பெறப்பட்ட ஊதியத்தை தவறு எனக் கூறி, ரூ.20 முதல் ரூ.25 லட்சம் வரை திரும்ப செலுத்தக் கூறப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஓய்வூதியமும் பெற முடியாமல் தவிக்கின்றனர்” என்றார் மயில்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் 45 நாளில் தீர்வு கிடைக்கும் என அரசு கூறுவதைப் பற்றியும் விமர்சித்த மயில், “நாங்கள் 4.5 ஆண்டுகளாக கோரிக்கை மனுக்களை அளித்து வந்தும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. எட்டு முறை முதல்வரை சந்தித்து பேசியுள்ளோம். அமைச்சர்கள், அதிகாரிகளிடம் எச்சரிக்கை அளித்துள்ளோம். ஆனால் மாற்றமே இல்லை” என்றார்.
முன்னாள் எம்எல்ஏக்களுக்கு இருமுறை ஓய்வூதிய உயர்வு வழங்கியபோது, ஆசிரியர்கள் பிச்சை எடுக்க வேண்டிய நிலையில் தள்ளப்படுவதை அவர் கடுமையாக கண்டித்தார். “ஆகஸ்ட் 8 அன்று சென்னையில் கோட்டையை முற்றுகையிடுவோம்” என அறிவித்தார்.
English Summary
DMK Govt MK Stalin Govt teachers