செல்போனை தாயார் பறித்ததால் மகள் தற்கொலை! - Seithipunal
Seithipunal


செல்போனை தாயார் பறித்ததால் நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருள்ஞானபுரத்தைச் சேர்ந்த தம்பதி  தேவச்சந்துரு வேணி அனிஷ் வான்மதி.இந்த தம்பதிக்கு 18 வயதில்  ரஷிகா என்ற மகளும், ராகுல் என்ற மகனும் உள்ளனர்.தேவச்சந்துரு மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து சென்று விட்டதால் வேணி அனிஷ் வான்மதி குழந்தைகளுடன்  செண்பகராமன்புதூர்  பகுதியில் வசித்து வருகிறார். மகள் ரஷிகா தடிக்காரன்கோணத்தில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில் இளைஞர் ஒருவரை ரஷிகா காதலித்து வந்ததை அறிந்த தாயார்  படிப்பு முடிந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி மகளிடம் இருந்து செல்போனை பறித்து வைத்துக் கொண்டார். செல்போனை தாயார் பறித்ததால்  மனவேதனையில் இருந்த ரஷிகாமின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தொங்கிக்கொண்டிருந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த வேணி அலறிய நிலையில் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து கதவை உடைத்து ரஷிகாவை மீட்டு மருத்துவமனையில் அனுமத்தனர். ரஷிகாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Daughter committed suicide as mother took away her mobile phone


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->