காங்கேயம் அருகே பரிதாபம்.! அரசு பேருந்து மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் அரசு பேருந்து மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் வடபழனி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் கவுதம்(22) கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் கவுதம் நேற்று நள்ளிரவு திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த நட்டார்பாளையம் பிரிவு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது அவ்வழியாக வந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக கவுதம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கவுதம் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் காங்கேயம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கவுதமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

College student killed in govt bus collision in near kangeyam


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->