கல்லூரியில் படிக்கும் போதே காதல்.. குழந்தையை கொடுத்துவிட்டு எஸ் ஆன ஷேக் முகம்மது.! - Seithipunal
Seithipunal


சென்னையை அடுத்துள்ள தாம்பரம் மகாலட்சுமி நகர் மசூதி காலனி பகுதியை சார்ந்தவர் ஷேக் முகமது (வயது 20). இவன் மேடவாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், முதுகலை முதல் வருடம் பட்டப்படிப்பு பயின்று வருகிறான். 

இந்நிலையில், தன்னுடன் கல்லூரியில் பயின்று வந்த 18 வயது கல்லூரி மாணவியை திட்டமிட்டே காதல் வலையில் வீழ்த்தியுள்ளான். இவனது காதல் கவிதைகளில் விழுந்த மாணவியும், காதலித்து வந்துள்ளார். காதல் வார்த்தையை நம்பி காமுகனின் ஆசைக்கு மாணவி இணங்கியுள்ளார். 

தற்போது பெண்ணிற்கு ஆண்குழந்தை பிறந்த நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ள கூறி மாணவி வற்புறுத்தியுள்ளார். ஆனால, நான் உன்னை திருமணம் செய்ய மாட்டேன். உன்னால் முடிந்ததை செய்துகொள் என்று கொடூரன் மிரட்டல் விடுத்துள்ளான். 

இதனால் மனம்நொந்துபோன மாணவி, தனது பெற்றோருடன் சென்று அங்குள்ள தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஷேக் முகம்மதை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Tambaram Drama Love Sexual abuse culprit Sheik Muhammad Arrest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->