வீட்டில் குளிர்சாதன பெட்டி வெடித்து சென்னை போலீசார் பலி.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள அயனாவரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் சபரிநாத். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் தனது சொந்த ஊரான பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூருக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை சபரிநாத் வீட்டிற்கு கீழ் வீட்டில் வசித்து வரும் சாந்தி என்பவர் சமையல் செய்வதற்காக சபரிநாத்தின் வீட்டிற்கு சென்றார். அங்கு அவர் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. 

இந்த தீ விபத்தில் சபரிநாத் மற்றும் சாந்தி உள்ளிட்டோர் வீட்டிலிருந்து வெளியில் வர முடியாமல் காப்பாற்றுமாறு கத்தி கூச்சலிட்டனர். இதில் எதிர்பாராதவாறு அவர்களது உடலிலும் தீ பிடித்து எரிந்தது. 

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் படி, போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். அதன் பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது சபரிநாத்தும், சாந்தியும் உடல் கருகிய நிலையில், பிணமாக கிடந்தனர். 

இதைத் தொடர்ந்து போலீசார் இரண்டு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் சம்பவம்  குறித்து வழக்குப்பதிவு செய்து, குளிர்சாதன பெட்டி வெடித்ததற்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai police inspector died for fridge explosion


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->