21 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்; சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவு..! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகர காவல்துறையில் பணிபுரியும் 21 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்து காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து சென்னை காவல்துறை காவல் ஆணையர் அருண் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: 

சென்னை நுண்ணறிவுப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த உஷாராணி மத்திய குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சேகர் சிங் புதிய வண்ணாரப்பேட்டை சட்டம் ஒழுங்கிற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த தாமஸ் பேசின்பாலம் சட்டம் ஒழுங்கிற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த தீபக்குமார் திருமங்கலம் சட்டம் ஒழுங்கிற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த செல்வராணி மத்திய குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த லோகநாதன் யானைக்கவுனி சட்டம் ஒழுங்கு பிரிவிற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சரவணன் துறைமுகம் குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த வனிதா விருகம்பாக்கம் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த விஜயலட்சுமி ஸ்டான்லி அரசு மருத்துவமனை சட்டம் ஒழுங்கு பிரிவிற்கும், புதிய வண்ணாரப்பேட்டை சட்டம் ஒழுங்கில் இருந்த கிருஷ்ணராஜ் நந்தம்பாக்கம் குற்றப்பிரிவுக்கும், தலைமை செயலக காலனி குற்றப்பிரிவில் இருந்த ஹரிஹரசுகன் மத்திய குற்றப்பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கோயம்பேடு குற்றப்பிரிவில் இருந்த உமா மகேஸ்வரி மத்திய குற்றப்பிரிவுக்கும், கோயம்பேடு குற்றப்பிரிவில் இருந்த கோமதி மத்திய குற்றப்பிரிவுக்கும், மீனம்பாக்கம் குற்றப்பிரிவில் இருந்த மங்களலட்சுமி மத்திய குற்றப்பிரிவுக்கும், சென்னை பாதுகாப்பு பிரிவில் இருந்த சிதம்பரபாரதி நொளம்பூர் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், சென்னை பாதுகாப்பு பிரிவில் இருந்த முத்தேலு மத்திய குற்றப்பிரிவுக்கும், மத்திய குற்றப்பிரிவில் இருந்த ஹேமாவதி சென்னை பாதுகாப்பு பிரிவுக்கும், திருமங்கலம் சட்டம் ஒழுங்கில் இருந்த சுப்புலட்சுமி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், பேசின் பாலம் சட்டம் ஒழுங்கில் இருந்த சிவகுமார் சென்னை பாதுகாப்பு பிரிவுக்கும், யானைக்கவுனி சட்டம் ஒழுங்கில் இருந்த சரவணன் செம்பியம் குற்றப்பிரிவுக்கும், நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்த ராஜேஸ்வரி மத்திய குற்றப்பிரிவுக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று சென்னை காவல்துறை காவல் ஆணையர் அருண் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Police Commissioner orders transfer of 21 inspectors


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->