சென்னை OMR சாலையில் கொடூர விபத்து! 5 பெண்கள் உடல்நசுங்கி பலி! அதிர்ச்சி பின்னணி! - Seithipunal
Seithipunal



மாமல்லபுரம் அருகே பண்டித மேடு ஓ.எம்.ஆர் சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஐந்து பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  

மாடு மேய்த்துக் கொண்டிருந்த இந்த ஐந்து பெண்கள் சாலையை கடக்க முயன்ற போது, அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது. 

இதில், ஐந்து பேரும் உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சிலர் சாலையோரம் அவர்கள் அமர்ந்திருந்த போது, அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியதாகவும் சொல்கின்றனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். 

இதனையடுத்து, காரின் ஓட்டுநரை கைது செய்து சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai OMR car accident 5 womans death


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->