சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! தீவிர சோதனையில் போலீசார்! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி: 

சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு மையத்திற்கு இன்று காலை 11:10க்கு மர்ம நபர் தொலைபேசி மூலம் அழைத்து, கோயம்பேட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் நடைபாதை 1 இல் சரியாக 11 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என தெரிவித்துள்ளார். 

தகவல் அறிந்த காவல்துறையினர், உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களை வரவழைத்து நடைபாதை 1 இல் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் அந்த நடைபாதையில் உள்ள பயணிகள் அவர்களது பைகள், பேருந்துகள் மற்றும் அங்குள்ள கடைகள், பேருந்து நிலையத்திற்கு உள்ளே வரக்கூடிய வாகனங்கள் அனைத்தையும் தீவிரமாக சோதனை நடத்தினர். 

சோதனையில் நடைபாதை 1 இல் எந்த ஒரு வெடிகுண்டு இல்லாததால், நடைமேடை 2 இல் சோதனையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவத்தாதல், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் இடையே பெரும் பரபரப்பு ஏற்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Koyembedu bus stand Bomb threat


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->