பேராசிரியர் வேலைவாய்ப்பில் தமிழ் வழி முன்னுரிமை மறுப்பு! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Chennai hc order Professor job issue
சென்னை உயர்நீதிமன்றம்: விவகாரம் – உதவி பேராசிரியர்களின் மனுக்கள் தள்ளுபடி**
சென்னையில் உள்ள அரசு உதவி பெறும் எத்திராஜ் மகளிர் கல்லூரியில், தமிழ் வழி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாமல் நியமிக்கப்பட்ட 5 உதவி பேராசிரியர்களுக்கான ஒப்புதல் மறுப்பு தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடியாகின.
64 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நடைபெற்ற நியமனங்களில், மொழிசார் முன்னுரிமை பின்பற்றப்படவில்லை என கல்வியியல் இயக்குநரகம் ஒப்புதல் மறுத்தது. இதை எதிர்த்து, நியமிக்கப்பட்ட மகேஸ்வரி, மேனகா உள்ளிட்ட 5 பேர் வழக்கு தொடர்ந்தனர்.
மனுதாரர்கள், “அறிவிப்பில் தமிழ் வழிக்கு முன்னுரிமை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை; 3 வருடங்களுக்கு பிறகு ஒப்புதல் மறுப்பு கொடூரம்” என வாதிட்டனர். ஆனால் அரசு தரப்பு, “முறைவழிகள் பின்பற்றப்படவில்லை; வழக்கு தொடர இவர்கள் தகுதியற்றவர்கள்” என எதிர்வாதம் முன்வைத்தது.
இருவழி வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி சி. குமரப்பன், அரசு தரப்பின் நிலைப்பாட்டை ஏற்று, உதவி பேராசிரியர்கள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
English Summary
Chennai hc order Professor job issue