உச்சம் தொடும் வெயில் - அறிவுரை வழங்கிய சென்னை மாவட்ட நிர்வாகம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கோடைகாலம் ஆரம்பித்தது முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:

* வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால், மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

* காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை தேவையின்றி வெளியே வர வேண்டாம்.

* நீர்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.

* அவசியமில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

* நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

* எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.

* பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai district administration advised to peoples for heat


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->